Thursday, 29 September 2011

புலிப்பாணி ஜோதிடம்;நாடி பார்த்தல்

நாடிபார்த்து சித்த வைத்தியம் செய்தது ஒரு காலம்.இன்று அப்படிப்பட்ட வைத்தியர்கள் இருக்கிறார்களா என்பதேகேள்விக்குறிதான்...இப்போதெல்லாம் சித்த வைத்தியர்களே மாத்திரையை போட்டுக்கொண்டு உடல் உபாதையை தீர்த்துக்கொள்கின்றனர்.


புலிப்பாணி ஜோதிடம்;நாடி பார்ப்பது எப்படி என சொல்கிறது.

பாடல்;
பாரப்பா இன்னமொரு விவரங்கேளு
பகர் புதனும் குரு சனியும் வாத நாடி
சீரப்பா துர்கிரகம் சூரி சேயும்
சிரப்பான பாம்புகளும் பித்த நாடி 
நேரப்பா பால்மதியும் சுங்கன் தானும் 
நேர்மையுள்ள சிலேட்டுமத்தின் கிரகமென்று
வீரப்பா போகருடை கடாட்சத்தாலே 
விவரமெல்லாம் புலிப்பாணி விளம்ப கேளு.

விளக்கம்;மனிதனுக்கு உயிர் நாடியாக விளங்கும் மூன்று நாடிகளுக்கான கிரகங்களை கூறுகிறேன்.புதனுக்கும்,சனிக்கும் உரியது வாத நாடியாகும்.துர்கிரகம் எனப்படும் சூரியனும்,செவ்வாயும் சிறப்பு மிக்க பாம்புகள் எனப்படும் ராகுவும்,கேதுவும் ஆகிய இடங்களுக்கு உரியது பித்த நாடியாகும்.சந்திரன்,சுக்கிரன் போன்றவர்களுக்கு உரியது சிலேத்தும நாடியாகும்.இதனை என் குருவாகிய போகர் அருளினால் கூறினேன்.


Related Article:

Post Comment

1 comment:

FOOD said...

பயனுள்ள தகவல் பகிர்வு.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner