Tuesday, 4 October 2011

புலிப்பாணி ஜோதிடம் 300 ;நன்கு படித்தவர் ஜாதகம்

பாடல்;
சாற்றினேன் குடும்பத்தில் பிறந்தேன் ஞானி
சார்வான் துலையதுவும் சாஸ்திர வல்லோன்
போற்றினேன் புதனதுவும் கேந்திர கோணம்
பொல்லாத சனியனுமே துலங்க வேண்டும்
தூற்றினேன் கலைமறியும் லெக்கின கேந்திரம்
சொற்பெரிய நரகுருவும் வாக்கில் நின்றால்
சாற்றினேன் பண்டிதனாம் போகந் நூலால்
சார்வாக புலிப்பாணி சாற்றக் கேளே.

விளக்கம்;
கும்ப லக்கினத்தில் பிறந்த ஜாதகர் சிறந்த ஞானியாக திகழ்வார்.துலா லெக்கினத்தில் பிறந்த ஜாதகர் சாஸ்திரன் வல்லவனாக திகழ்வான்.ஆனால் இவருக்கு புதனும் சனியும் கேந்திர கோணங்களில் இருக்க வேண்டும்.சந்திரன்,கேந்திரம் பெற்று குருபகவான் வாக்கு ஸ்தானத்தில் நின்றதால் பிறந்த ஜாதகர் நன்கு படித்த பண்டிதனாக திகழ்வான் இதனை போகர் அருளிய நூலின் வாயிலாக ஆராய்ந்து புலிப்பாணி கூறியுள்ளேன்.


Related Article:

Post Comment

1 comment:

வைரை சதிஷ் said...

பாடலும் விளக்கமும் சூப்பர்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner