ஜெயலலிதா வெற்றி பெற நம்பும் குரு வக்ரம்;
உள்ளாட்சி தேர்தலில் யாருக்கு வெற்றி என்ற கணிப்பு என்பதை விட தமிழ்க முதல்வர் ஜெயலலிதா மிக சிறந்த ஜோதிட ஆர்வலர்.அவர் விஜயகாந்தை கழட்டி விடும்போதே புரிந்து போனது..குரு வக்ரத்தில் மரியாதை,கெளரவம்,தயாள குணம் எல்லாம் கெட்டு போகும் காலம் இது .எனவே அ.தி.மு.க தலைவர் இப்படி நடந்து கொண்டதில் வியப்பேதும் இல்லை.
குரு வகரம்னா என்ன..? குரு வின் கடும்கோபம்.சூரியனின் உக்கிர பார்வையில் இப்போது குரு இருப்பதால் குரு கடும் கோபத்தில் இருக்கிறார்.இது டிசம்பர் 26 வரை காணப்படும்.இதனால் குருவின் இயல்பான குணங்களான தாராளம்,தர்ம சிந்தனை,தெய்வீக பண்பு,ஆகியவை கெட்டு விடுகிறது.உலகில் குரு ஆதிக்கம் செலுத்தும் காரகத்துவங்களும் பாதிக்கப்படும்.
ஜெயலலிதா அவர்களின் சிம்ம ராசிக்கு குரு பாதகமானாலும் (இப்போதைய நிலைபடி) அவருடைய லக்கினமாகிய மிதுனத்திற்கு குரு கெட்டவன் என்பதால் ,கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் அடிப்படையில் டிசம்பர் 26 வரை அவர் நினைத்ததை நடத்தி தர வேண்டுமே...? அந்த வகையில் தன் வெற்றி இமாலய வெற்றியாகத்தான் இருக்கும்.உள்ளாட்சி தேர்தலில் அனைத்து நகராட்சி,பேரூராட்சி,மாநகராட்சியையும் கைப்பற்றியே தீருவோம் என அவர் நம்புகிறார் ....
Related Article:
2 comments:
நடக்குமா?
கிடைத்த சந்தர்ப்பத்தை தனது ஆணவத்தால் அழித்து விடுவார் போல இருக்கிறதே?
வந்தேன்.
Post a Comment