முரண் சினிமா ;
ஒரு பரபரப்பு திரில்லிங்கான கேரக்டரை அதே சமயம் ஓவர் வில்லத்தனம் இல்லாத கேரக்டரை தமிழ் சினிமாவில் பார்த்து ரொம்ப நாளாகி விட்டது.இந்த படத்தில் பிரசன்னா செமயாக கலக்கியிருக்கிறார்.அஞ்சாதே வில்லனை விட எனக்கு இந்த வில்லன் பிரசன்னா ரொம்ப பிடிச்சிருக்கு.
சேரன் வழக்கம்போல அழுது வடியும் முகம்.மாமனாரிடம் அடி வாங்கும் மருமகனாக நடித்தது முதல் அந்த முகத்தை இன்னும் கழட்டி வைக்கவே இல்லை சேரம்.திருந்துங்க சார்.எப்ப பார்த்தாலும் எதையோ அப்புன..மாதிரி..முகத்துல எப்பவும் இறுக்கம்.இந்த படத்து கேரக்டர் அப்படித்தான்.ஆனா அடுத்த படத்துலியும் இது தொடர்ந்தா ஆம்பளை அழுமூஞ்சி நடிகர் ஆகிடுவார் சேரன்.
பிரசன்னா வுக்கு தந்தையால் தொல்லை.சேரனுக்கு மனைவியால் தொல்லை.இருவரும் சந்திக்கின்றனர்.இருவரும் சந்தோசமா இருக்கணும்னா...இவங்க ரெண்டு பேரும் இருக்க கூடாது..கொல்லணும்.அதே சமயம் ரெண்டு பேரும் மாட்டிக்க கூடாது.அதுக்கு ஒரு வழி..உங்க மனைவியை நான் கொல்றேன்.என் அப்பாவை நீங்க கொல்லுங்க என டீல் பேசுகிறார்.இதற்கு சேரன் மறுக்கிறார்.சேரன் மனைவி விபத்தில் இறக்க...பிரசன்னா அது விபத்தல்ல..நாந்தான் கொன்னேன்.நம்ம டீல் இப்ப ஆரம்பம் என சேரனிடம் சொல்ல ஆரம்பித்ததில் இருந்து படம் செம வேகம்..சஸ்பென்ஸ்...ஹீரோயின் இருவரும் மனதில் பதியவில்லை..இசையை போலவே...
பிரசன்னாவின் அப்பா...கேரக்டர் மட்டுமே மனதில் தங்குகிறது...படம் முழுக்க ஆக்கிரமிப்பது பிரசன்னா.மாங்காய் திருட்டுதனமாய் பறிக்க முதலில் பிரசன்னா சென்று வந்ததும்,இப்ப நிங்க போங்க என்பார்..சேரன் பயந்து பயந்து போய் பறித்துவிட்டு வரும்போது...பிரசன்னா ,திருடன் என சத்தம் போட...சேரன் முகத்தை பார்க்கணுமே..
மனிதர்களில் இருக்கும் கேரக்டர்களில் அதிகப்படியானவை சேரன் மற்றும் பிரசன்னா.இருவருமே முரணானவர்கள்.இந்த படம் செம திரில்லிங்கா...ஸ்வாரஸ்யமா இருக்கு...அவசியம் பாருங்க...
Related Article:

7 comments:
சேரன் வச்சிகிட்டா வஞ்சனை பண்றாரு...விடுங்க ஹிஹி!
நேற்று பார்த்தேன் அருமையான படம் ..
பிரசன்னா நடிப்பு அருமை
ஆனால் கிளைமாக்ஸ் எதிபார்ததுதான்
இன்று என் ப்ளாக் இல் ...
தெரியுமா உங்களுக்கு ?
பயனுள்ள தகவல்……
Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !
http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html
திரப்பார்வையா,ம் ம் நடத்துங்க.
Post a Comment