Thursday, 26 January 2012

பங்கு சந்தையால் ஒரு கோடி இழந்தவர் ஜாதகம்

பங்கு சந்தையால் ஒரு கோடி இழந்தவர் ஜாதகம்;



இவர் ஒரு பெண்.ஜாதக ஆராய்ச்சிக்கு ஒரு ஜோதிடரிடம் வந்த ஜாதகம்.இவருக்கு சுக்கிர திசை வந்தபோது,உங்க கும்ப லக்னத்துக்கு யோகாதிபதி திசை வந்துவிட்டது.இனி நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்,.நினைத்ததெல்லாம் நடக்கும் என புகழ்ந்திருக்கிறார்.இரண்டில் குரு இருப்பதால் நிதி சம்பந்தமான துறையில் வட்டிக்கு விடுதல்,பங்கு சந்தை போன்றப்வற்றில் ஆர்வம் இருக்குமல்லவா.உடனே இவரும் நான் பங்கு சந்தையில் முதலீடு செய்யலாமா எனக்கேட்க,தாராளமா செய்யலாம்.பணம் வந்து கொட்டும் என்றிருக்கிறார்.

பொதுவாக கும்ப லக்னத்துக்கு சுக்கிர திசை முதல் பத்து வருடத்துக்கு நல்லது செய்யாது என்பது விதி.அதன்படி..இவர் பங்கு சந்தையில் லட்சக்கணக்கில் முதலீடு செய்ய,சுக்கிரதிசை சூரிய புத்தி பெரும் நஷ்டத்துடன் முடிந்தது.குடும்பத்தினர் சென்ற காரும் விபத்தில் மாட்டிக்கொண்டது.கணவருக்கும் உடல் பாதிப்பு சூரிய புத்தியில் ஏற்பட்டது.கணக்கு பார்த்தால் பங்கு சந்தையில் ஒரு கோடி இழந்தார்.

பங்கு சந்தையில் முதலீடு செய்யுமுன்,உங்கள் ஜாதகத்தில் 6,8,12 க்குடையவர் திசா புத்தி நடக்கிறதா..உங்கள் வீட்டு குழந்தை ஜாதகத்திலும் உங்களுக்கும் ஒரே திசை நடக்கிறதா என்பதை கவனித்து முதலீடு செய்யுங்கள்...2க்குடையவன் 6,8,12 ல் மறைந்திருந்தால் எவ்வளவு முதலீடு செய்தாலும் நஷ்டம்தான்!!

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!!!


Related Article:

Post Comment

1 comment:

Yoga.S.FR said...

வணக்கம் சதீஷ் சார்!குடியரசு தின வாழ்த்துக்கள்!!!பலரும்பயனடைய உங்கள் ஆலோசனை உதவும்,நன்றி பகிர்வுக்கு!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner