மேசம்,கடகம்,துலாம்,மகரம் இவை எல்லாம் சர ராசிகள்.வேகம் அதிகம்.,எதுவா இருந்தாலும் இப்பவே நடக்கனும் என்பார்கள்...ராசி,லக்னம் இரண்டுமே மேலே இருக்கும் நான்கு ராசிகளில் இருந்தால் ஜெட் வேகம்தான்.எதையும் அவசரமா செஞ்சுட்டு அப்புறம் கலங்கி நிற்பார்கள்..ராசிகளில் இவை முழுமையானது முதன்மையானது என்பதால் ஊரில் பெரிய மனிதர்கள் பெரிய மனசுக்காரர்கள் இவர்கள்தான்.தன் மனசாட்சிபடி நடந்துகொண்டால் மட்டுமே இவர்கள் புகழ் பெறுவர்.கம்பீரமான தோற்றமும் நெடிய உயரமும் கூர்மையான கண்களும் ,அநியாயத்தை உடனே தட்டி கேட்கும் துடிப்பும் இவர்கள் யார் என சொல்லும்.
Tuesday, 2 March 2021
மேசம்,கடகம்,துலாம்,மகரம் ராசி ரகசியம் : ஜோதிடம்
மிதுனம் ராசியினர் சந்திக்கும் அஷ்டம சனி
அஷ்டம சனி முடிஞ்சது எல்லா பிரச்சினையும் தீரலையே என தவிக்கும் ரிசபம் ராசியினர் அஷ்டம சனி என்றால் என்னவென்று புரிஞ்சுகிட்டா போதும்.ராசிக்கு எட்டில் சனி மறைவது அஷ்டம சனி.
Tuesday, 29 September 2020
குலதெய்வ வழிபாடு சூட்சுமம்
குலதெய்வ வழிபாடு நம் தந்தை ,தாத்தா,அவரது தந்தை என வருடம்தோறும் அவர்கள் பார்த்து வழிபட்டு அவர்களது சக்தி ,ஆகர்ஷணம்,ஆன்ம சக்தி எல்லாம் அந்த சிலையில் ஏற்றி வைத்திருப்பர்.குலதெய்வத்தை நீங்கள் கண்களால் காணும்போதே உங்கள் கண்கள் வழியாக உங்கள் ஆன்ம சக்தி சிலையோடு கலந்து விடும்.இவ்வாறு முன்னோர் ஆன்ம சக்தி கருங்கலால் ஆன அந்த சுவாமி சிலையில் ஊடுருவி இருப்பதால் அவர்கள் காலமான பின்னரும் அதன் தெய்வீக சக்தி உங்கள் ஆன்மாவோடு கலந்து பலன் கொடுக்க உங்களை வழிநடத்த குலதெய்வத்தை அடிக்கடி காண வேண்டும் வருடம் ஒருமுறையாவது பார்த்து வர உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.திருப்பதி ,திருச்செந்தூர் போன்ர ஸ்தலங்களில் சித்தர்கள்,மகான்கள் ஆசி கிடைக்கிறதோ அது போல உங்கள் வம்சாவழியினர் ஆசி கிடைக்க குலதெய்வம் வழிகாட்டும்.
Wednesday, 22 July 2020
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2021
ராகு திசை ஜாதகத்தில் நடந்தால் பாதிப்பை தராமல் செல்லாது.உங்களுக்கு ஏற்கனவே ரிசபம் ராசியில் சனி,செவ்வாய்,சூரியன் இருப்பின் பாதகம் அதிகமாக கூடும்.எட்டுல ராகு வந்தாலும் இரண்டில் கேது வருகிறார் வருமானம் கொடுப்பார்.கேது கொஞ்சம் வெளிச்சம் தருவார்.இது கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவே சொல்லப்படுவதாகும் அரசு பதவில் இருக்கும் துலாம் ராசியினர் தொழில் துறையில் புகழ் பெற்றவர்களாக இருப்பவர்கள் கணக்கு வழக்குகளை சரியாக வெச்சுக்குங்க..அவ்ளோதான்..காடு ,நீர்நிலை ஓரங்களில் குடியிருப்போர் சுற்றுப்புறத்தை நல்லா சுத்தமா வெச்சுக்குங்க...விசப்பூச்சிகள் உங்களை பார்க்க வீடுதேடி வரும்.
ஆயினும் கேது ஒரு பாபக்கிரகம் எனும் அடிப்படையில் மேற்கண்ட பாவங்களில் கேது இருப்பது நல்லநிலை அல்ல. ராகுவைப் போல ஒரு கடுமையான தோஷத்தைக் கேதுவால் தர இயலாது என்ற அர்த்தத்தில் மட்டுமே இது சொல்லப்படுகிறது. செவ்வாயைப் போல கேது பலன் தருபவர். இதன்படி செவ்வாய் யோகம் தரும் லக்னங்களான கடகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய சூரிய, சந்திர, குருவின் லக்னங்களுக்கு சுப, சூட்சுமவலுவுடன், லக்னச்சுபர்களின் தொடர்பு இருக்கும் நிலையில் கேது மிகப்பெரிய நன்மைகளைச் செய்வார்.
மீனம் ராசியினருக்கு ராகு மூன்றாம் இடத்துக்கு வருவது யோகமானது மறைந்த ராகு நிறைந்த பலன்களை தருவார் தைரியம் துணிச்சல் தரும் அதிர்ஷ்டமான ராகு பெயர்ச்சி என்று சொல்லலாம் ..